உலகளவில் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் 2.24 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் மாதந்தோறும் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவின் UPI கட்டண முறை இலங்கையிலும் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இலங்கைக்கு வரும் இந்தியர்கள் UPI செயலி மூலம் பில்களை செலுத்தலாம்.

இந்நிலையில், 2020ல் வாட்ஸ்அப்பில் UPI அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 140க்கும் மேற்பட்ட வங்கிகள் இதைப் பயன்படுத்துகின்றன. சர்வதேச UPI பேமெண்ட் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட வாட்ஸ்அப் பயனர்களுக்கு மட்டுமே தற்போது இது கிடைக்கிறது.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.