இலங்கை

அரசியலமைப்பு ரீதியாக இலங்கை ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் அக்டோபர் மாதம் 5ம் திகதி சனிக்கிழமை நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தேர்தல் தொடர்பில் அண்மையில் நியமிக்கப்பட்ட தனது அரசியல் அமைச்சரவைக்கும் , ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.