காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அறிவிக்க இஸ்ரேலை வலியுறுத்தி ஐநா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அத்துடன் ஹமாஸ் தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஐநா.பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரஸ் எக்ஸ் பதிவில் , தீர்மானத்தை உடனடியாக அமல்படுத்தத் தவறினால் மன்னிக்க முடியாத குற்றமாகும் என தெரிவித்துள்ளார்.