இலங்கை

இலங்கையில் வாகனங்களின் தற்போதைய சந்தை விலை அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளார்.

வரி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அடுத்த ஆண்டு முதல் வாகன இறக்குமதியை மீண்டும் தொடங்குவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளமையினால் இந்த நிலைமை ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.

அரசாங்கம் ஜனவரி மாதத்தில் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நடைமுறைப்படுத்தியது, இதன் விளைவாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, வாகனங்கள் பெரும் கட்டுப்பாடுகளின் கீழ் இறக்குமதி செய்யப்படும் என்றும் இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.

புதிய வாகனங்கள் இறக்குமதிக்குப் பிறகு வாகனங்களின் தற்போதைய சந்தை விலை மேலும் அதிகரிக்கும் என சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐக்கிய இளைஞர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனியார் வாகனங்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த வருடம் முதல் படிப்படியாக தளர்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.