இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணை தொடர்பான மீளாய்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த மீளாய்வு நடவடிக்கைகள் சுமார் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.