Waipara விற்கு அருகிலுள்ள Waikari Valley இல் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடுவதால், North Canterbury இல் உள்ள குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 8 மணிக்குப் பின்னர் இந்த தீ பரவல் ஏற்பட்டது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள எவரும் உள்ளூர் அவசர சேவைகளின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு சம்பவ இடத்தில் 15 தீயணைப்புக் குழுக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

மேலும் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் இன்று இரவு முழுவதும் தொடரும் என கூறப்படுகிறது.

மக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

செய்தி நிருபர் - புகழ்