எதிர்வரும் திங்கட்கிழமை முதல் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

 

நேற்றைய தினம் தனியார் பஸ் போக்குவரத்து சங்கங்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமையான போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கப்பட்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் துணை பொது மேலாளர் பண்டுக சுர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

 

அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அதன் தலைவர் தெரிவித்தார்.

 

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி பஸ் சேவையை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.