நியார்க்கில் பிஸ்கட் சாப்பிட்ட இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஒர்லா பாக்செண்டேல் தொழில்முறை நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடர்வதற்காக நியூயார்க்கிற்குச் சென்றுள்ளார்.

அங்கு கடந்த 11ம் திகதி பாக்செண்டேல் வெண்ணிலா புளோரன்டைன் எனப்படும் பிஸ்கட்டை சாப்பிட்டுள்ளார். பின்னர் சில மணித்தியாலத்தில் உடல் முழுவதும் ஒவ்வாமை ஏற்பட்டு குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் விசாரணையில், அவருக்கு வேர்க்கடலை அலர்ஜி உள்ளதும், அவர் சாப்பிட்ட பிஸ்கட்டில் வேர்க்கடலை சேர்க்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. பிஸ்கட் பாக்கெட்டில் வேர்க்கடலை குறிப்பிடப்படாததால் அது தெரியாமல் சாப்பிட்டதால் குறித்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.