இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாவது பாகத்தை ரிலீஸ் செய்த பிறகு உலகநாயகன் கமல்ஹாசனுடன் அவரது 234வது படத்திற்காக இணைந்தார். மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி 34 வருடங்களுக்குப் பிறகு இணைந்திருக்கிறது. கடைசியாக நாயகன் படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது KH 234 என அழைக்கப்பட்ட இந்த படத்திற்கு தக் லைஃப் என பெயரிட்டு இருக்கிறார்கள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா, நடிகர் ஜெயம் ரவி, மலையாள நடிகர் துல்கர் சல்மான் உள்ளிட்ட நடிக்கிறார்கள். முன்னதாக கமலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக சில தகவல்கள் பரவி வருகிறது.

கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என்றால் த்ரிஷா, ஜெயம் ரவி அல்லது துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிப்பாரா என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. எனினும் இது குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

அந்த வகையில் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் படத்தின் நடிகர்கள் யார், கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய்தான் நடிக்கிறாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.