பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுகிழமை மிகப்பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது. 18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த சீசன் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று வருகின்றது. சண்டைகள் மற்றும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இந்நிகழ்ச்சி சென்றதால் ரசிகர்களும் ஆர்வமாக இந்த சீசனை பார்த்து வருகின்றனர். தற்போது விஷ்ணு, அர்ச்சனா, தினேஷ், மணி, மாயா, விஜய் வர்மா என ஆறு போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

இவர்களில் யார் பிக் பாஸ் டைட்டிலை தட்டிச்செல்ல போகின்றார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். பெரும்பாலான ரசிகர்கள் அர்ச்சனா தான் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் என கூறி வருகின்றனர். அவருக்கு தான் அதிகப்படியான ஆதரவு இருந்து வருகின்றது. வாக்குகளிலும் அர்ச்சனா தான் முன்னிலையில் இருக்கின்றார். எனவே கண்டிப்பாக அர்ச்சனா தான் இந்த சீஸனின் டைட்டில் வின்னர் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஒருவேளை அர்ச்சனா டைட்டிலை வென்றால் மிகப்பெரிய சாதனையை படைப்பார் என்ற தகவல் வந்துள்ளது. பிக் பாஸ் சீசன் தமிழில் மட்டுமல்லாமல் இந்தியளவில் பல மொழிகளில் நடந்து வருகின்றது. இதுவரை இந்தியளவில் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒருமுறை கூட வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த போட்டியாளர்கள் டைட்டிலை வென்றதில்லை.

வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்த போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்களே தவிர டைட்டிலை வெல்லவில்லை. எனவே பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் அர்ச்சனா டைட்டிலை வென்றால் வைல்ட் கார்டு எண்ட்ரியாக வந்து டைட்டிலை வென்ற முதல் போட்டியாளர் என்ற பெருமையை பெறுவார் அர்ச்சனா.

இந்த சாதனையை அர்ச்சனா செய்வாரா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஆனால் ரசிகர்கள் கண்டிப்பாக அர்ச்சனா தான் டைட்டில் வின்னர், இந்த சாதனையை அவர் நிகழ்த்திக்காட்டுவார் என சோஷியல் மீடியாவில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.