தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிம்பு தனது இரண்டாவது இன்னிங்ஸில் கெத்து காட்டி வருகிறார். அடுத்ததடுத்து தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து வருகிறார். இவர் அடுத்ததாக 'எஸ்டிஆர் 48' படத்தில் நடிக்க இருக்கிறார். நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் ஷுட்டிங் துவங்குவதற்காக ரசிகர்கள் வெறித்தனமான காத்திருப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் 'எஸ்டிஆர் 48' படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் 'எஸ்டிஆர் 48' உருவாக உள்ளதாக அதிரடி அறிவிப்பு வெளியானது. தேசிங்கு பெரியசாமி ஏற்கனவே துல்கர் சல்மான் நடிப்பில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கியவர். இப்படத்தின் ஜானரே ரசிகர்கள் இடையில் அமோகமான வரவேற்பினை பெற்றது.

இதனையடுத்து தற்போது சிம்புவுடன் இவர் கூட்டணி அமைத்துள்ள 'எஸ்டிஆர் 48' படம் வரலாற்று ஜானர் பின்னணியில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் சிம்பு ஹீரோ, வில்லனாக இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அதில் ஒரு கேரக்டருக்காக தற்போது உடல் எடையை குறைக்கும் பணியில் சிம்பு தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருவதாலும் படத்தின் ஷுட்டிங் தொடர்ந்து தள்ளிப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து 'எஸ்டிஆர் 48' படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் துவங்கி, படம் 2025 ஆம் ஆண்டில் தான் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.