விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அசுர வேகத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தளபதி 68 படத்தின் மொத்த படப்பிடிப்பும் அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களுக்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. அதனால் இப்போது முதலே தனது அடுத்தப் படம் குறித்து ஆர்வம் காட்டி வருகிறார் விஜய். அதாவது தளபதி 69 படத்திற்கான கதை கேட்டு வந்த விஜய், தற்போது இயக்குநர் யார் என்பதையும் முடிவு செய்துவிட்டாராம்.

அனைவருமே தளபதி 69 படத்தை அட்லீ இயக்குவார் என எதிர்பார்த்தனர். ஆனால், அட்லீக்குப் பதிலாக கார்த்திக் சுப்புராஜ் தான் தளபதி 69 படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தாண்டு தீபாவளிக்கு கார்த்திக் சுப்புராஜ்ஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகியிருந்தது. எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. அப்போதே விஜய்யிடம் ஒரு கதை சொல்லியிருப்பதாக கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்தார். அதன்படி கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்த கதை விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும், அதனால் அவர் தளபதி 69 படத்துக்கு சம்மதம் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இதனால் விஜய் - கார்த்திக் சுப்புராஜ் - சன் பிக்சர்ஸ் கூட்டணியில் தளபதி 69 உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.