பிக் பாஸ் 7 வீட்டில் இருக்க முடியாது என அடம்பிடித்து வந்த கூல் சுரேஷ் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வாரம் எல்லோரும் சேர்ந்து ஸ்மால் பாஸ் வீட்டுக்கு போகப் போகிற ஆறு பேரை தேர்வு செய்து சொல்லுங்கள் என ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டார் பிக் பாஸ்.

இதையடுத்து நிக்சன், தினேஷ், விஜய் வர்மா, மாயா, பூர்ணிமா, அர்ச்சனா ஆகியோர் வரிசையாக வந்து நின்றார்கள். மாயா, பூர்ணிமா ஒன்னா இருந்தால் அவர்கள் தனி உலகில் இருப்பது போன்று அவங்க மட்டும் இருப்பாங்க. அதனால் எனக்கு ஓகே இல்லை என விசித்ரா சொன்னதை கேட்டு மாயாவுக்கு தான் முதலில் கோபம் வந்தது.

திரும்ப திரும்ப வந்து மாயா, பூர்ணிமா ஒரே கேம் ஆடுகிறாங்க. மாயா, பூர்ணிமா சேர்ந்திருந்தால் பிரச்சனையாகும்னு சொல்றிங்க. அந்த கேம் உங்களை பாதிக்கவில்லை தானே. உங்க கேமை பாதிக்கிறதா என விசித்ராவிடம் கேட்டார் மாயா.

இதையடுத்து தான் விசித்ராவுக்கு நிஜமாகவே கோபம் வந்து, ஏய் இரண்டு பேரும் ஒன்னா சேர்ந்து விளையாடிகிட்டு மைண்டே பண்ண மாட்டீங்க எங்களை எல்லாம் என்றார். அதை கேட்டு விசித்ராவை முறைத்துப் பார்த்தார் மாயா.

அதனால் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணப் போறியா என மாயாவிடம் பூர்ணிமா கேட்டார். பூர்ணிமா சாதாரணமாக கேட்க மாயாவோ, இனிமேல் என்கிட்ட பேசாத என கோபமாக கூறினார். நான் என்னடி பண்ணேன் என்பது போன்று மாயாவை பார்த்தார் பூர்ணிமா.

பிக் பாஸ் வீட்டில் எத்தனையோ நட்பு உருவாகியிருக்கிறது. ஆனால் மாயா, பூர்ணிமா இடையேயான நட்பு நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டிருக்கிறது. வெளியே சென்றாலும் இந்த நட்பு தொடரும் என நம்பலாம்.

அடுத்தவர்களை பாடாய் படுத்தினாலும், அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் நட்பு சில ஹவுஸ்மேட்ஸுக்கு மட்டும் அல்ல பார்வையாளர்களுக்கும் பிடிக்கவில்லை.