காமெடி செய்து மக்களை சிரிக்க வைப்பதற்கு பெயர் போன மாயா கிருஷ்ணன் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு அவர் ரொம்ப சீரியஸான ஆளாக மாறிவிட்டார். தோழி பூர்ணிமாவுடன் சேர்ந்து கொண்டு மாயா செய்யும் விஷயங்கள் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை.

இந்நிலையில் சரவண விக்ரமை பார்த்தாலே தனக்கு பயங்கர எரிச்சலாக இருப்பதாக தெரிவித்துள்ளார் மாயா.

அதுவும் விக்ரமிடமே இதை கூறியிருக்கிறார். ஆனால் விக்ரமோ, மாயா கூறியதை கேட்டு டென்ஷன் ஆகவும் இல்லை, ரியாக்ட் செய்யவும் இல்லை. ஆனால் விக்ரமுக்கு பதில் பார்வையாளர்கள் ரியாக்ட் செய்திருக்கிறார்கள்.

மாயாவுக்கு விக்ரமை பார்த்தால் எரிச்சலாக ஆகுது என்பதால் இனி தலைவனுக்கு தான் நாங்கள் ஓட்டு போடப் போகிறோம். கடைசி வரை பிக் பாஸ் வீட்டில் இருப்பேன் என்கிற நம்பிக்கையில் இருக்கும் விக்ரமுக்கு மாயா மூலம் இப்படியொரு புது சப்போர்ட் கிடைத்திருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் முன்பே மேடையில் உலக நாயகன் கமல் ஹாசனிடம், நான் கடைசி வரை இருப்பேன் என நம்பிக்கையுடன் கூறினார் விக்ரம். மேலும் கப்பு எனக்கு தான் சார் என கமலிடம் சொல்லிவிட்டுத் தான் பிக் பாஸ் வீட்டில் காலடி எடுத்து வைத்தார்.

பிக் பாஸ் வீட்டில் யார், யார் இருக்கிறார்கள் என்பது கவலை இல்லை. அடுத்தவர்களின் பலத்தை பார்த்து பயம் இல்லை. எனக்கென்று திறமை இருக்கிறது. டிராஃபியை வெல்வோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அதனால் டைட்டில் வின்னர் நான் தான் என்று இருக்கிறார் சரவண விக்ரம்.

அவரின் இந்த நம்பிக்கை பலருக்கும் பிடித்துவிட்டது. முதலில் அவரை காமெடி பீஸாக பார்த்த சக போட்டியாளர்களும், பார்வையாளர்களும் தற்போது அப்படி பார்ப்பது இல்லை. அதிலும் குறிப்பாக 5 ஸ்டார்களை ஜெயித்த பிறகு விக்ரமை யாரும் ஈஸியாக எடுத்துக் கொள்வது இல்லை.

இதற்கிடையே விக்ரம் கையில் பிக் பாஸ் 7 டிராபியை பார்க்கும் வரை ஓய மாட்டோம் என்று இருக்கிறார்கள் பிரதீப் ஆண்டனி ஆதரவாளர்கள்.

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மட்டும் அல்ல பிக் பாஸுக்கும் பொழுது போகவில்லை என்றால் விக்ரமை தான் கலாய்க்கிறார். யார் கலாய்த்தாலும் அசர மாட்டேன் என ஸ்டெடியாக இருந்து வருகிறார் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.