Whanganui இல் ஆயிரக்கணக்கான டொலர் பணம் மற்றும் 1 கிலோ மெத்தாம்பேட்டமைனுடன் நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மத்திய மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் விநியோகத்தை இலக்கு வைத்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாங்கனுய் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு (OCU) கடந்த வார இறுதியில் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையின் போது சுமார் 70,000 டொலர் பணம் மற்றும் 1 கிலோ மெத்தாம்பேட்டமைன் மற்றும் பிற கட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனையடுத்து 46, 47, மற்றும் 53 வயதுடைய மூன்று ஆண்கள் மற்றும் 31 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் Levin மற்றும் Whanganui நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

செயல் துப்பறியும் மூத்த சார்ஜென்ட் கேரி ப்ரீஸ்ட், இந்த கைது நடவடிக்கை பல்வேறு குழுக்களின் கூட்டு முயற்சி என்றார்.

சமூகத்தில் சட்டவிரோத போதைப்பொருள் பற்றி தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்