இலங்கை

ஜேர்மனியின் “ஐடபெல்லா ” (Aida Bella) என்ற அதி சொகுசுக் கப்பல் இன்று (09) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துளாதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பலில் 2008 பயணிகள் மற்றும் 633 பணியாளர்களுடன் வருகை தந்துள்ளது.

ஐடபெல்லா, அதன் செழுமை மற்றும் உயர்தர வசதிகளுக்காக புகழ்பெற்றது, அதன் துறைமுக அழைப்பை மேற்கொண்டது, கொழும்பு துறைமுகத்திற்கு நேர்த்தியை சேர்க்கிறது.

AIDA Cruises நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த கப்பல், ஆடம்பரமான தங்குமிடங்கள், பொழுதுபோக்குகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த உணவுகளுக்கு பெயர் பெற்றது.

அதன்படி 13 அடுக்குகளை கொண்டுள்ள இந்த கப்பல் 1025 விருந்தினர் அறைகள், 12 மதுபான சாலைகள், 8 நீச்சல் தடாகங்கள், 3 ஓய்வறைகள் மற்றும் 7 உணவகங்களை கொண்டுள்ளது.

Aitken Spence PLC இன் துணை நிறுவனமான Aitken Spence Shipping Ltd நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கப்பல்களை இயக்குபவர்களுக்கான சேவைகளை தொடர்ந்து வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.