இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் மாரியா அஹமத் திதி (Mariya Ahmed Didi) ஆகியோர் இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

அதன்படி இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு இடையில் இன்று வெள்ளிக்கிழமை முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

 

உயிர்க்குமிழி பாதுகாப்பு நடைமுறை மற்றும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவற்றை பின்பற்றி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

 

அந்த நிலையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இலங்கைக்கு விஜயம் செய்யும் இரண்டாவது முறை இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும் இன்றைய விஜயத்தின் போது அவர் இலங்கை மற்றும் மாலைதீவு பிரதிநிதிகளுடன் தனித்தனியான சந்திப்பை மேற்கொள்வாரா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இத்துடன் இலங்கை சார்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது