இலங்கை

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில் இருதரப்பு சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இருதரப்பு கலந்துரையாடலுக்கான இந்திய தூதுக்குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பு சற்றுமுன்னர் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.