இலங்கை

சர்வதேச சுற்றுலாப் பயணிகள் 206 பேருடன் போலந்தின் முதல் சார்ட்டர் விமானமான Enter Air ஆஃப் (ENT1561) இலங்கையை வந்தடைந்துள்ளது.

குறித்த விமானம் இன்று (03) காலை 7.45 மணிக்கு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையதிற்கு வந்தடைந்துள்ளது.

இலங்கை சுற்றுலாத்துறையின் ஏற்பாட்டில் விமான நிலையத்தில் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளால் பயணிகள் வரவேற்கப்பட்டனர்.

குறித்த விமான சேவை எதிர்வரும் 2024 மார்ச் இறுதி வரை போலந்தில் இருந்து தொடர்ச்சியாக இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enter Air என்பது போலந்து சார்ட்டர் விமான நிறுவனம் ஆகும் .

தற்போது, அவர்கள் போலந்தில் மிகப்பெரிய நிறுவனமாகவும், பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய விமான நிறுவனமாகவும் உள்ளமை குறிப்படத்தக்கது.