பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70,934 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல அமெரிக்காவில் 49,907 பேருக்கும் பிரான்சில் 29,759 பேருக்கும் இத்தாலி நாட்டில் 26,051 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகளவிலான கொரோனா பாதிப்பு 120 கோடியைக் கடந்துள்ளது. ஐரோப்பியாவில் வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் ஐரோப்பிய நாடுகள் அச்சத்தில் உள்ளன.