ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

டோரிஷிமா தீவுக்கு அருகே காலை 11 மணியளவில் 6.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் டோக்கியோவிற்கு தெற்கே 550 கிமீ தொலைவில் பசிபிக் பெருங்கடலில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

நாட்டின் கிழக்கு கடற்கரையில் உள்ள இசு தீபகற்பத்தில் உள்ள தீவுகளுக்கு 1 மீட்டர் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.