Bay of Plenty இல் உணரப்பட்ட திரள் நிலநடுக்கங்களில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் Bay of Plenty இல் உள்ள Kawerau நகரத்தில் பதிவாகிய நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்களில் ஒன்றாகும் என்று ஜியோநெட் கூறுகிறது.

ஜியோநெட் திரளில் இதுவரை 600 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களைப் பதிவு செய்துள்ளது, அவற்றில் எட்டு நிலநடுக்கங்கள் ஒரு ரிக்டர் அளவுகோலுக்கு மேல் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் இந்த 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காலை 10.42 மணியளவில் உணரப்பட்டுள்ளது.

இது Whakatāne இற்கு மேற்கே 20 கிமீ தொலைவில் 4 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

Bay of Plenty பகுதியில் சனிக்கிழமை அதிகாலை முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜியோநெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அப்பகுதியில் வசிப்பவர்கள் அச்சப்படத் தேவையில்லை. இது அப்பகுதிக்கு வழக்கமான செயல்பாடு, மேலும் எங்கள் குழு விஷயங்களைக் கண்காணித்து வருகிறது" என்று அவர் கூறினர்.