பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் 16 தங்கப் பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்வியங்காடு – கட்டைப்பிராய் பகுதியிலேயே நேற்று முன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஓய்வு பெற்ற ஆசிரியையான வீட்டின் உரிமையாளர் வீட்டைப் பூட்டிவிட்டு கடந்த இரு நாட்களாக வெளியூர் சென்றிருந்தார்.

 அந்தச் சமயமே இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித் துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் தடயவியல் மற்றும் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.