நீர் கட்டணப் பட்டியலை வழங்கும் சந்தர்ப்பத்திலேயே அதற்கான கட்டணத்தை அறவிடும் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்னோடித் திட்டத்தை வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய செயற்றிட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரவுள்ளது.

புதிய முறைமையின் கீழ், நீர் கட்டணப் பட்டியலைச் சமர்ப்பிக்கும் போதே, வங்கி வரவட்டை அல்லது கடனட்டை மூலம் கட்டணத்தை செலுத்த முடியும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.