சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் கட்சி குறித்து டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக கூறி இருந்த நிலையில், திடீர் என இன்று காலை, தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரப்போவதில்லை என்கிற முடிவை எடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

பல வருடங்களாக ரஜினி அரசியலுக்கு வருவார் என காத்திருந்த ரசிகர்கள் இதனால் ஏமாற்றம் அடைத்தாலும், மனதளவில் ரஜினியின் உடல் நலனை கருத்தில் கொண்டு, அவரது முடிவை ஏற்றுக்கொண்டனர்.

ஆனால் இதனை ஒரு சில ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...

எனவே போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டு வாசலின் முன் கிட்ட தட்ட 50 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒன்று கூடினார்கள்.