ஒரே ஊரில் படப்பிடிப்பு நடைபெற்றாலும் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும்  ஒருவரை ஒருவர் நேரில் கூட பார்த்துக் கொள்ள முடியாத அளவிற்கு நயன்தாராவிற்கு  கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் அண்ணாத்த பட ஷூட்டிங்கில் ங்கேற்றுள்ளார். இதற்காக தனி விமனத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா  உள்ளிட்டோர் புறப்பட்டுச் சென்ற புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.

தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அண்ணாத்த படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடித்து வருகின்றனர்.

அதே சமயத்தில் விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் படஷூட்டிங்கும் ஐதராபாத்தில் தான் நடைபெற்று வருகிறதாம்.விஜய்சேதுபதி, சமந்தா நடித்து வரும் இந்த படத்திற்காக விக்கியும் ஐதராபாத்தில் தான் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.