இந்த வாரம் காவல்துறை அதிகாரிகளின் பயிற்சிகள் குறித்து கேன்டர்பரியை சேர்ந்த குடியிருப்பாளர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்.

நாளை முதல் எதிர்வரும் சனிக்கிழமை (31)வரை நியூ பிரைட்டன், ஷெர்லி, ரிக்கார்டன் மற்றும் ஆஷ்பர்டன் ஆகிய இடங்களில் சிறப்பு குழுக்களுக்கான தந்திரோபாய பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவிப்பு தெரிவித்துள்ளது.

எனவே பயிற்சியின்போது அதில் துப்பாக்கிகள் ஏந்திய அதிகாரிகள் காணப்படுவதுடன் மேலும் உரத்த சத்தங்கள் காணப்படும் என குறித்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.