கடந்த 2014ஆம் ஆண்டு சுந்தர் சிறந்த இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதால் அதனை தொடர்ந்து அரண்மனை திரைப்படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் வெளியானது.

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்கியுள்ளார் சுந்தர் சி. ஆர்யா நடித்துள்ள இந்தப்படத்தின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களில் மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக்கின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை நெகிழ செய்துள்ளது.

திரையரங்குதிறப்பு குறித்த அறிவிப்பிற்காக அரண்மனை 3 படக்குழுவினர் காத்து கொண்டிருக்கின்றனர். தியேட்டர்கள் திறந்த பிறகு படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.