அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை அரசுக்குள் இருந்து விமர்சிக்கும் நபர்கள் அரசில் இருந்து வெளியேறி தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச, ஆளும் கட்சி உறுப்பினர்களிடம் நேற்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.

“அரசில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்காகக் கதவுகள் திறந்துள்ளன” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“அரசாக எடுக்கும் தீர்மானங்கள் சகலரையும் சார்ந்ததாகும். அரசுக்குள் இருந்துகொண்டு அரசை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல.

அரசில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்காகக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். அவர்கள் வெளியில் சென்று தமது விமர்சனக் கருத்துக்களை முன்வைக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.