சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு பல ஆண்டுகளாக போராடி முன்னேறி சேஷுவின் மரணம் அவரது ரசிகர்களை மட்டுமல்லாது சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சேஷு, பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

சந்தானத்துடன் நினைத்து A1, பாரீஸ் ஜெயராஜ், குலுகுலு போன்ற படங்களில் நடித்துள்ளார். அண்மையில் சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குபட்டி ராமசாமி படத்தில் சேஷூ ஒரு முக்கியதான கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில், கடந்த 15ஆம் திகதி அவர் பள்ளிக்கரணையில் உள்ள வீட்டில் இருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் நேற்று சேஷு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடல் பள்ளிக்கரணையில் அவரது வீட்டில் நேற்று பொதுமக்களின் அஞ்சலிக்கா வைக்கப்பட்டது. இவர் உயிரிழந்த செய்தி கேட்டு பதறிப்போய் வந்த சந்தானம், அவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக என்னுடன் பயனித்துக்கொண்டு இருந்தார். வடக்குபட்டி ராமசாமி படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். டிடி ரிட்டன்ஸ் 2 படத்திலேயேவும் அவர் நடிக்க இருந்தார். அதற்குள் இப்படி ஆகிவிட்டது என்றார்.

மேலும், சேஷு மரண செய்தி கேள்விப்பட்ட நடிகர் ரவி மரியா, நடிகர் ஜீவா, நடிகர் மாறன் ஆகியோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர்கள்,நண்பர்கள், உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு இன்று காலை எட்டு மணி அளவில் இறுதிசடங்குக்கான சடங்குகள் செய்யப்பட்டு, அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த சேஷுவின் ஆன்மா சாந்தி அடைய பலர் இறைவனை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.