இந்தியா: தமிழ்நாடு

இன்று தமிழக சட்டசபை கூடிய நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியும் தனது முழு உரையை வாசிக்காமல் புறக்கணித்தார்.

தேசிய கீதம் பாடவில்லை என்று கூறி உரையை முழுவதும் புறக்கணித்தார் ஆளுநர் ரவி. மேலும், தமிழக அரசு தனக்குத் தயார் செய்து தந்த உரையில் கூறப்பட்ட சில கருத்துகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறி உரையை முடித்துக்கொண்டார்.

வெறும் சில நிமிடங்களில் ஆளுநர் தனது உரையை முடித்துக் கொண்டார். கேரளாவைப் போலவே தமிழ்நாட்டிலும் அரசின் உரையைப் படிக்காமல் ஆளுநர் புறக்கணிப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.