பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இறுதிக்கட்டம் நெருங்கி இருக்கிறது. ஒரு லட்சம் மதிப்புடைய பணப்பெட்டி பிக் பாஸ் வீட்டிற்குள் வைக்கப்பட்டது. இந்த பண பெட்டியில் இருக்கும் பணத்தின் மதிப்பு கூடவும் செய்யலாம் குறையவும் செய்யலாம் என பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

அவ்வப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் மத்தியில் பெட்டியை எடுத்துவிடலாமா என்ற குழப்பம் ஏற்ப்பட்டது. ஒரு பக்கம் வைல்ட் கார்ட் போட்டியாளர் ஜெயிக்க முடியாது என அர்ச்சனா பெட்டியை எடுத்துவிட்டார், மற்றொரு பக்கம் இளைய தலைமுறையினருக்கு வழிவிடுவதாக விசித்ரா பெட்டியை எடுத்துவிட்டதாகவும் வதந்திகள் பரவி வந்தன. ஆனால் அவர்கள் இருவருமே பெட்டியை எடுக்கவில்லை என்பது தான் உண்மையான தகவல்.

இந்நிலையில் ஃப்ரீஸ் டாஸ்க் நடந்த ஒரு சில நாட்களிலேயே 15 லட்சத்திற்கு மேல் பெட்டி வந்தால் கண்டிப்பாக தான் அந்த பெட்டியை எடுப்பதாக கூறியிருந்தார் பூர்ணிமா.

அந்த வகையில், இப்போது 16 லட்சம் இருக்கும் பண பெட்டியை அலேக்காக தூக்கியிருக்கிறார் பூர்ணிமா. பெட்டியை எடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் முன்பே அவரது உடைகளை பேக் செய்தார் பூர்ணிமா. அந்த வாகையில், பூர்ணிமா 16 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.