நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா படங்களின்மூலம் தன்னை சிறப்பான இயக்குநராக நடிகராக, தயாரிப்பாளராக வெளிப்படுத்தியவர். காமெடி ஹாரர் ஜானரில் வெளியான இநத்ப் படங்கள் ரசிகர்களுக்கு நல்ல என்டர்டெயின்மெண்டை கொடுத்தது. கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் வசூலை குவித்தது.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா XX படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, நிமிஷா, சத்யன் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகமாகவே வெளியானது. இந்நிலையில் காமெடி கேரக்டர்களிலேயே தொடர்ந்து நடித்துவந்த ராகவா லாரன்சிற்கு இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

இந்நிலையில் தற்போது தன்னுடைய அடுத்தப்பட வேலைகளில் தற்போது ராகவா லாரன்ஸ் துவங்கியுள்ளார். அடுத்ததாக அவர் தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் புதிய படத்திற்கான கலந்துரையாடலை துவங்கியுள்ளார். இந்தப் படத்தின் கலந்துரையாடலை அவர் தற்போது பாண்டிச்சேரியில் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தை ராகவா லாரன்சே தயாரிக்கவுள்ளதாகவும் கூறுப்படுகிறது.

நடன இயக்குநராக தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர் ராகவா லாரன்ஸ். விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்துள்ள இவர், தொடர்ந்து இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையை வெளிப்படுத்தினார். சமூக செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டுவரும் இவர் அறக்கட்டளை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பது போன்ற செயல்களையும் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.