பிக் பாஸ் 7 வீட்டில் தினமும் ஏதாவது டாஸ்க் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்று லைக், டிஸ்லைக் டாஸ்க் கொடுத்தார் பிக் பாஸ். யாரும் எதிர்பாராவிதமாக மணி சந்திராவுக்கு டிஸ்லைக் கொடுத்தார் ரவீணா தாஹா.

இந்நிலையில் இன்று ரேங்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டது. முதல் ராங்க் டைட்டில் வின்னரையும், 15வது ரேங்க் எவிக்ட் ஆகிற வாய்ப்பு இருக்கிறதையும் குறிக்கும் என்றார் ரவீணா.

அவர் அப்படி சொன்னபோது முதல் ரேங்க் இடத்தில் பிரதீப் ஆண்டனியும், 15வது ரேங்கில் வினுஷா தேவியும் நின்று கொண்டிருந்தார்கள். அப்படினா இந்த வாரம் போரிங் போட்டியாளரான வினுஷா தேவி தான் வெளியே போகிறார் போன்று என ஏற்கனவே பேச்சு கிளம்பிவிட்டது. மேலும் வினுஷா கிளம்புவதால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எந்த நஷ்டமும் இல்லை என்கிறார்கள் பார்வையாளர்கள்.

ரவீணா விதிமுறைகளை கூறி முடித்ததுமே வேலையை ஆரம்பித்தார் நிக்சன். என்டர்டெயின்மென்ட்டா பெருசா நீங்க இங்க எதையும் பண்ணலனு நினைக்கிறேன் என பிரதீப் ஆண்டனியிடம் கூறினார் நிக்சன்.

நீ பாடியதை விட இந்த வீட்டில் நான் நிறைய பாடியிருக்கிறேன் என நான் நம்புகிறேன் என்று பிரதீப் கூறியதை கேட்ட நிக்சனுக்கு அடுத்து என்ன சொல்வது என்று தெரியவில்லை. பிரதீப் சொல்வதும் உண்மை தான்.

ராப்பரான நிக்சன் பெரிதாக பாடவே இல்லை. ஆனால் நடிகரான பிரதீப் தினமும் அழகாக பாடி பார்வையாளர்களை மகிழ்ச்சி அடைய வைக்கிறார். அவருக்காக இசையமைப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள்.

சக போட்டியாளரின் மனதை புண்படுத்தியிருக்கிறீர்கள் என விஷ்ணு தானாக வந்து பேச, நான் ப்ரொமோவுக்காக எல்லாம் கேம் ஆட வரலனு அவரையும் ஆஃப் செய்தார் பிரதீப்.

ஐஷு சொன்னா நான் லோ கிளாஸ்னு. நீங்க எல்லாம் ஏழைகள் என்றால், நான் யாருனு எனக்கு புரியவே இல்லை. பிச்சைக்காரனா?. நான் ஒரு பெரிய ஆர்டிஸ்டா மாறிக் காட்ட எனக்கு இந்த காசு தேவை. இந்த இடத்தை யாருக்காகவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். என்னை அடிச்சு சாவடிச்சு வேணும்னா இந்த இடத்தை எடுத்துக்கோங்க என பிரதீப் ஆவேசமாக சொல்வதுடன் ப்ரொமோ வீடியோ முடிந்துவிட்டது.

நீங்க பெரிய ஆர்டிஸ்டா வர எக்ஸ்போஷர் தேவை பிரதீப். அதை உங்களுக்கு தாராளமாக கொடுத்திருக்கிறார் பிக் பாஸ். நீங்களும் நல்லவிதமாக நடந்து கொண்டு வருகிறீர்கள். உங்களின் சிரிப்புக்கு ரசிகராகிவிட்டார் பிக் பாஸ்.

மேலும் உங்களின் பாடல்களுக்கு பார்வையாளர்கள் ரசிகர்களாகிவிட்டார்கள். நீங்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு பெரிய பாடகராகலாம். யார் கண்டது. இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானோ, அனிருத்தோ உங்களுக்கு பாட வாய்ப்பு கொடுக்கலாம்.

இதற்கிடையே பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஆளாளுக்கு நான் ஏழை, நான் ஏழை என சொல்வதை ஏற்க முடியாது என்கிறார்கள் பார்வையாளர்கள்.