நடிகர் விஜய் மற்றும் சங்கீதா தம்பதிகளின் மகனான ஜேசன் சஞ்சய் கனடாவில் திரைப்பட கல்லூரியில் படித்து வந்த நிலையில், அண்மையில் இவர் "Pull The Trigger" என்ற டைட்டில் கொண்ட குறும்படத்தை இயக்கி உள்ளார். இந்த குறும்படத்தில் உள்ள காட்சிகளை பார்க்கும்போது தரமாக உள்ளது என்றும் ஒரு கைதேர்ந்த இயக்குனரின் வடிவத்தில் உருவானது போல் இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட படத்தினை இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. லண்டனில் சங்கீதாவின் அப்பா தொழிலதிபராக உள்ள நிலையில், லண்டனில் உள்ள சுபாஸ்கரனை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையால் தான் ஜேசன் சஞ்சய் லைகா தயாரிப்பில் படம் இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின. அது மட்டுமில்லாமல் தாத்தா எஸ் ஏ சியின் ஆசையால் சஞ்சய் இயக்குநராகவதாக கூறப்பட்டது.

ஆனால்,இயக்குநராக மாறுவதற்கு இவர்கள் யாரும் காரணம் இல்லையாம். மகனை இயக்குனராக்க ஆசைப்பட்டதே விஜய்யின் மனைவி சங்கீதா தானாம். அவர் தான் தன் மகனை இயக்குநராக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதனால், பல கட்ட முயற்சிகளை எடுத்து சிபாரிசு செய்து லைக்கா நிறுவனத்திடம் பேசினார் என்று, மூத்த நடிகர் சித்ரா லட்சுமணன் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.