சோஷியல் மீடியா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பாடகி சின்மயி, தான் ஒரு விபத்தில் சிக்கியது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், குழந்தைகளுடன் சின்மயி காரில் சென்றபோது குடிபோதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் வேகமாக எனது கார் மீது மோதிவிட்டு, நிற்காமல் தப்பித்தும் சென்று விட்டார். இந்த விபத்தில் தனக்கோ அல்லது தன் உடன் இருந்தவர்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என்றும், தாங்கள் பத்திரமாக தப்பித்ததை நினைத்து மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள் என்றும் சின்மயி பதிவிட்டுள்ளார். இந்த பதிவினைப் பார்த்த ரசிகர்கள் அவரை நலம் விசாரித்து வருகின்றனர்.