நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியர் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன என கடந்த வருடம் அக்டோபர் 9 ஆம் திகதி ட்விட்டர் பதிவில் வெளியிட்டனர்.

இந்நிலையில், இவர்கள் தங்கள் இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்த நாளை இன்று கொண்டாடியுள்ளனர்.

இதுபற்றி விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், என் முகம் கொண்ட... என் உயிர், என் குணம் கொண்ட... என் உலக் (இந்த வரிகளை பதிவு செய்ய மற்றும் நம்முடைய புகைப்படங்களை ஒன்றாக வெளியிட நீண்டகாலம் காத்திருந்தேன் எனதருமை குழந்தைகளே) என தெரிவித்து, என்னுடைய மகன்கள் உயிர் ருத்ரோநீல் மற்றும் உலக் தெய்வீக் ஆகியோருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.

உங்கள் இருவரையும் வார்த்தைகளால் விவரிக்கும் விசயங்களை கடந்து, வாழ்க்கையில் எல்லாவற்றையும் மற்றும் ஒவ்வொரு விசயமும் கடந்து, அப்பாவும், அம்மாவும் அன்பு செலுத்துகிறோம். எங்களுடைய வாழ்வில் வந்ததற்காகவும், மிக மகிழ்ச்சியாக ஆக்கியதற்காகவும் உங்கள் இருவருக்கும் நன்றி.

நீங்கள், அனைத்து நேர்மறையான மற்றும் வாழ்த்துகளை கொண்டு வந்துள்ளீர்கள்.

இந்த ஓராண்டு முழுவதும், வாழ்நாள் முழுமைக்கான மகிழ்ச்சிக்கான தருணங்களை நிறைத்திருந்தது. உங்கள் இருவரின் மீதும் அன்பு செலுத்துகிறோம். நீங்கள் எங்களுடைய உலகம் மற்றும் எங்களுடைய ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்று பதிவிட்டு உள்ளார். இதுபற்றி வெளியிடப்பட்ட புகைப்படத்தில், இரட்டை குழந்தைகள் இருவரும் கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளில் காணப்படுகின்றனர்.

இந்த பதிவை வெளியிட்டதும், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கான செய்திகளை குவித்து வருகின்றனர்.