இந்தியா: தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் எக்கியார்குப்பம் கடற்கரை ஓரம் வாம்பாமேடு எனும் இடத்தில் சிலர் காவல்துறையினருக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இந்த இடத்திற்கு சாராயம் குடிக்க வந்தவர்களில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஆறு பேர் தங்கள் வீட்டில் மயங்கி விழுந்துள்ளனர். 

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவர்களை புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே இன்று மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மதியம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து தற்போது 3 சாராய வியாபாரிகளை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.