யாழ்ப்பாணம்  விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது. 

இதன்படி வாரத்திற்கு 04 விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச news1st க்கு தெரிவித்தார்.

சென்னையிலிருந்து புறப்படும் விமானம் காலை 10.50 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடையும் பின்னர் யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து காலை 11.50 மணிக்கு மீண்டும் சென்னை நோக்கிய விமான பயணத்தை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.