இலங்கை இந்தியா உட்பட பல நாடுகளில் வாட்ஸ் அப் செயலியில் தீடீர் தடங்கள் ஏற்பட்ட நிலையில் அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

வாட்ஸ்ஆப் செயலியின் மத்திய பரிமாற்ற கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையே இதற்கு காரணம் என மெடாவின் பேச்சாளர் ரொய்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்து வாட்ஸ்அப் மீளமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் இந்த கோளாறு முழுமையாக இன்னும் சரி செய்யப்படவில்லை.

இந்நிலையில் வாட்ஸ்ஆப்பை விரைவாக இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு அனைவரும் பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.