தெற்கு ஆக்லாந்தில் நேற்றிரவு ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து கொலை விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Wattle Downs இல் உள்ள ஒரு முகவரியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட 19 வயது இளைஞன் 
Manukau மாவட்ட நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த மரணம் தொடர்பாக வேறு யாரையும் தேடவில்லை என்றும், ஆனால் விசாரணை தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த எவரும் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொண்டு 221023/8525 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்.