ஆக்லாந்து விமான நிலையத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கைக்குண்டு செயலற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய வளாகத்தில் உள்ள பொருட்கள் கிடங்கில் வழக்கமான ஸ்கேனிங் பணியின் போது சந்தேகத்திற்கிடமான பொதி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்புப் படை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.

போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்தில் இருந்தனர்.

குறித்த கிடங்கில் பணிபுரியும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர் மற்றும் சில சாலைகள் தடுக்கப்பட்டன.

ஆனால் விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை என்றும் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.