நேற்றிரவு ஆக்லாந்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

St Heliers இல் உள்ள Four Square கடையில் இரவு 7.30 மணியளவில் நடத்தப்பட்ட இந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒரு வாடிக்கையாளர் காயமடைந்தார்.

இச் சம்பவத்தில் 20 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

குறித்த பல்பொருள் அங்காடியின் செய்தித் தொடர்பாளர் எம்மா வூஸ்டர் கூறுகையில், யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.

வாடிக்கையாளர் மற்றும் ஊழியர்களுக்கு ஆதரவளிக்க நிறுவனம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது என்று அவர் கூறினார்.

இது போன்ற சீரற்ற சம்பவங்களை எப்போதும் தடுக்க முடியாது என்றாலும், பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இது காட்டுகிறது என்றார்.