இன்று காலை கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Horotiu Rd/மாநில நெடுஞ்சாலை 39 இல் இடம்பெற்ற குறித்த விபத்திற்கு காலை 11 மணியளவில் பொலிஸார் அழைக்கப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

இச் சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் ஒருவர் பலத்த காயங்களுடனும் மற்றொருவர் சிறிய காயங்களுடனும் வைகாடோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக St John ஆம்புலன்ஸ் சேவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து சாலை மூடப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் அப்பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.