இன்று காலை கிறிஸ்ட்சர்ச்சில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Stanmore சாலை மற்றும் Gloucester தெரு சந்திப்பிற்கு அருகே இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அதிகாலை 3.30 மணியளவில், Stanmore சாலையில் ஒரு வாகனத்தை நிறுத்துமாறு ஒரு போலீஸ் அதிகாரி சைகை செய்தார், இருப்பினும் டிரைவர் வாகனத்தை நிறுத்தாது தப்பி ஓடிவிட்டார்.

சிறிது நேரத்தில் அந்த வாகனம் மற்றொரு வாகனம் மற்றும் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது என செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

தப்பியோடிய வாகனத்தில் இருந்த ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மற்ற வாகனத்தின் இருந்த ஓட்டுநருக்கு எந்த பாதிப்பும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.