பிரதமர் ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசி கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடாவில் போராட்டம் வலுத்து வருவதால், அந்நாட்டு பிரதமர் ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, பல்வேறு இடங்களுக்குச் செல்பவர்களுக்கு, தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் போராட்டம் வலுத்து வருகிறது. சரக்கு வாகனங்கள் மூலமாக பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்தனர். கனடா பிரதமர், ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில், இன்னும் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜஸ்டின் ட்ரூடோவை ரகசிய இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.