கால்பந்து வீரர் ரொனால்டோ தன்னுடைய காதலியின் பிறந்தநாளுக்கு வித்தியாசமான பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

போர்த்துகல் தேசிய கால்பந்து அணியின் கேப்டனான ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

ரொனால்டோவுக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

ரொனால்டோ தற்போது விடுமுறையை கொண்டாட தன்னுடைய காதலியும் மாடலிங் நடிகையுமான ஜார்ஜினா ரோட்ரிக்சுடன் துபாயில் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று ரொனால்டோவின் காதலி ஜார்ஜினா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார்.

ஜார்ஜினாவுக்கு வித்தியாசமான பிறந்தநாள் பரிசைக் கொடுக்க விரும்பிய ரொனால்டோ துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவில் 'ஹேப்பி பர்த்டே ஜியோ' என்ற வாசகத்துடன் ஜார்ஜினாவின் புகைப்படத்தை ஒளிரச்செய்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

புர்ஜ் கலீபா கட்டிடத்தில் 3 நிமிட வீடியோவை ஒளிபரப்பு செய்வதற்கு சுமார் 50,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ. 50 லட்சம்) செலவாகும் என கூறப்படுகிறது.

மேலும், ரொனால்டோ புர்ஜ் கலீபா கட்டிடத்தில் ஒளிர்ந்த பிறந்தநாள் வாழ்த்து வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'வாழ்த்துகள் என் அன்பே' என்று கூறி பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் ரொனால்டோ - ஜார்ஜினா ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.