காத்தான்குடி சுகாதார அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் நேற்று (30) நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் ஜனவரி மாதம் 5ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,குறித்த பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 27 நபர்களுக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, குறித்த பகுதியானது இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.

இதேவேளை, நாளைதினம் மட்டக்களப்பு நகரிலுள்ள சகல வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டு சுகாதார தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் பலசரக்கு கடைகள் மற்றும் மருந்தகங்கள் மாத்திரம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.