மேல் மாகாணத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கான 11 இடங்களில் மேற்கொள்ளப்படும் உடனடி ஆன்டிஜன் பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நேற்றைய தினம் மேலும் 1,359 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது மேலும் 07 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைவாக கடந்த 18 ஆம் திகதி தொடக்கம் இன்று அதிகாலை 6 மணி வரையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆன்டிஜன் பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆகும்.

அவர்களுடன் தொடர்பு பட்ட 315 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த உடனடி ஆன்டிஜன் பரிசோதனைகள் எதிர்வரும் ஜனவரி 05ஆம் திகதி வரைக்கும் மேற்கொள்ளப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.