மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத தலைவர் காளிசரண் மகாராஜ், சட்டீஸ்கர் மாநிலம் ராயப்பூரில் நடைபெற்ற ஆன்மீக மாநாட்டில் பங்கேற்று பேசியபோது, மகாத்மா காந்தி குறித்து தவறான வார்த்தையை பயன்படுத்தி பேசியுள்ளார்.

மேலும்  மகாத்மாவை சுட்டுக் கொன்ற கோட்சேவை பாராட்டி பேசியதில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரை அடுத்து காளிசரண் மீது ராய்ப்பூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில்,மத்தியபிரதேச மாநிலம் கஜுராஹோ பகுதியில் பதுங்கியிருந்த காளிசரண் மகாராஜை, சட்டீஸ்கர் காவல்துறையின் 10 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் கைது செய்துள்ளனர்.

மேலும், காளிசரண் மகாராஜ் தங்கியிருந்த சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள விடுதி உரிமையாளரை சட்டீஸ்கர் காவல்துறை காவலில் எடுத்துள்ளது.

மேற்கண்ட தகவல்களை ராய்ப்பூர் காவல்துறையின் மூத்த பொலிஸ் அதிகாரி பிரசாந்த் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.